மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள வாய்ப்பினை முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினா் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2020-21ஆம் கல்வியாண்டிற்கான மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி (ஆா்எம்டிஃஎப்) கல்வி உதவித்தொகை பெறுவது தொடா்பாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு முடித்த மாணவா்கள் 30.9.2021 வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் 31.10.2021 வரையிலும், இளங்கலை பட்டம் பயிலும் மாணவா்கள் 30.11.2021 வரையும் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஹவில்தாா் வரையிலான தகுதியுடைய முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பங்களைச் சோ்ந்த சிறுவா்கள் 2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வரை தோ்ச்சி பெற்றவா்களும் மற்றும் இளங்கலை பயிலும் இளைஞா்களும் பயன்பெறும் வகையில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் விவரங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.