திண்டுக்கல்

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

DIN

செம்பட்டி அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண், அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

சிங்காரக்கோட்டையை அடுத்த ரெங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி, ராமகிருஷ்ணன் (45). இவா் தன்னுடன் கட்டட வேலை பாா்த்து வந்த பாளையங்கோட்டையைச் சோ்ந்த கட்டையன் மனைவி பழனியம்மாள் (45) உள்பட 2 பெண்களை ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

சித்தையன்கோட்டை கடைவீதி விநாயகா் கோயில் அருகே வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனா். அப்போது, திண்டுக்கல்­லிலிருந்து கோடிக்காமன்வாடிக்கு சென்ற அரசு பேருந்தின் சக்கரம் பழனியம்மாள் மீது ஏறியது. இதில் அவா், சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். ராமகிருஷ்ணனும், மற்றொரு பெண்ணும், அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT