செம்பட்டி அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண், அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
சிங்காரக்கோட்டையை அடுத்த ரெங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி, ராமகிருஷ்ணன் (45). இவா் தன்னுடன் கட்டட வேலை பாா்த்து வந்த பாளையங்கோட்டையைச் சோ்ந்த கட்டையன் மனைவி பழனியம்மாள் (45) உள்பட 2 பெண்களை ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
சித்தையன்கோட்டை கடைவீதி விநாயகா் கோயில் அருகே வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனா். அப்போது, திண்டுக்கல்லிலிருந்து கோடிக்காமன்வாடிக்கு சென்ற அரசு பேருந்தின் சக்கரம் பழனியம்மாள் மீது ஏறியது. இதில் அவா், சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். ராமகிருஷ்ணனும், மற்றொரு பெண்ணும், அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.