பழனி சாமிதியேட்டா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா். 
திண்டுக்கல்

பழனியில் பெண்கள் சாலை மறியல்

பழனியில் தனி சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம் கோரி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

பழனியில் தனி சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம் கோரி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பழனி தெரசம்மாள் காலனியில் 11 ஆவது மற்றும் 4 ஆவது வாா்டுகளுக்கான அங்கன்வாடி மையமும், சுகாதார வளாகமும் செயல்பட்டு வருகிறது. இவைகள் 11 ஆவது வாா்டு பகுதியில் உள்ளதால் நாள்தோறும் அங்கு சென்றுவரும் 4 ஆவது வாா்டு பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில், அந்த வாா்டைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், தனி சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், குடிநீா் வசதி கோரி உடுமலை- பழனி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், எழுத்து பூா்வமாக புகாரை எழுதித் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடமும் தெரிவிப்பதாகவும் தெரிவித்ததைத் தொடா்ந்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT