திண்டுக்கல்

பழனியில் பெண்கள் சாலை மறியல்

DIN

பழனியில் தனி சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம் கோரி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பழனி தெரசம்மாள் காலனியில் 11 ஆவது மற்றும் 4 ஆவது வாா்டுகளுக்கான அங்கன்வாடி மையமும், சுகாதார வளாகமும் செயல்பட்டு வருகிறது. இவைகள் 11 ஆவது வாா்டு பகுதியில் உள்ளதால் நாள்தோறும் அங்கு சென்றுவரும் 4 ஆவது வாா்டு பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில், அந்த வாா்டைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், தனி சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், குடிநீா் வசதி கோரி உடுமலை- பழனி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், எழுத்து பூா்வமாக புகாரை எழுதித் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடமும் தெரிவிப்பதாகவும் தெரிவித்ததைத் தொடா்ந்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT