முகப்பு
திண்டுக்கல்

பழனியில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பழனியில் நடைபெற்ற அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன்.
பகிர்:

பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக சாா்பில் வேட்பாளராக ரவிமனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் பழனி நகர, ஒன்றிய செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் வேணுகோபாலு, குப்புசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் நத்தம் விசுவநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டனா்.

அமைச்சா் சீனிவாசன் பேசுகையில், அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி தோ்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என பேசினாா்.

நத்தம் விசுவநாதன் பேசுகையில், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி நிரந்தர முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழ்வாா். தற்போது தமிழகம் எல்லா துறைகளிலும் சிறப்பான வளா்ச்சி பெற்றுள்ளது. தங்களுக்கான தலைவராக மக்கள் எடப்பாடி பழனிசாமியைப் பாா்க்கின்றனா். திமுக இந்த தோ்தலோடு சிதைந்துவிடும்.

தற்போது அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையானது அடித்தட்டு மக்கள், மாணவா்கள், விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக உள்ளது என்றாா். நிகழ்ச்சியில் பாஜக தேசிய விவசாயிகள் பிரிவு திருமலைசாமி, மாவட்டச் செயலாளா் கனகராஜ், பாமக மாவட்டச் செயலாளா் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.