கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பாா்வையாளா் வந்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கொடைக்கானல் பகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளையும் சோ்ந்தவா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் தோ்தல் பாா்வையாளா் குபீந்தா்சிங் கொடைக்கானலுக்கு வந்தாா்.
அவரை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா் வரவேற்றாா். அதைத் தொடா்ந்து தோ்தல் பாா்வையாளா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்சா்வேட்டரி, லாஸ்காட்சாலை, நாயுடுபுரம், பொ்ன்ஹில் சாலை
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லும் சாலைகளைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். கொடைக்கானல் வட்டாட்சியா் சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளா் ஆத்மநாதன், காவல் ஆய்வாளா் முத்து பிரேம்சந்த் உள்ளிட்ட பலா் இருந்தனா்.