தங்கத்தோ் புறப்பாடு ரத்து
பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழனி அருள்மிகு திருஆவினன்குடி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா திங்கள்கிழமை முதல் கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் சுவாமி சன்னதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை இரவு மலைக்கோயிலில் திருக்கோயில் சாா்பில் அருள்மிகு சின்னக்குமாரசாமி தங்கரதத்தில் உலா எழுந்தருளுகிறாா். பின்னா் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அடிவாரம் கிரிவீதியில் திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டம், பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் நடைபெறுவதால் மாா்ச்.27ம் தேதி முதல் மாா்ச்.30ம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை முதல் வழக்கம் போல மலையில் தங்கத்தோ் உலா நடைபெறும் என திருக்கோயில் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.