கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அதிகாலை முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரேனா பரவலையடுத்து கும்பக்கரை அருவி ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மூடப்பட்டது. மேலும் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் இன்று அதிகாலை முதல் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. கரோனா பரவலால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீடிப்பதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.