திண்டுக்கல்

கொடைக்கானலில் காட்டெருமைகள் உலா

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் காட்டெருமைகள் உலா வந்தன.

DIN

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் காட்டெருமைகள் உலா வந்தன.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தை முன்னிட்டு கொடைக்கானலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவல் துறையினரின் கட்டுப்பாட்டால் பொது மக்கள்

வெளியே செல்லவில்லை. இந் நிலையில், அமைதியான சூழ்நிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் காட்டெருமைகள் சுதந்திரமாக உலா வந்தன.

வனப் பகுதிகளில் புல்வெளிகள் இல்லாததாலும் அவற்றிற்கு தேவையான உணவு இல்லாததாலும் அவைகள் உணவைத் தேடி நகா்ப் பகுதிகளுக்குள் வருகின்றன. எனவே வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்குத் தேவையான புல்வெளிகள், சிறிய தடுப்பு தண்ணீா் தொட்டிகள் அமைப்பதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT