திண்டுக்கல்

கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றிய இருவா் கைது

DIN

திண்டுக்கல் அருகே கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள ஏ.வெள்ளோடு பகுதியில், அம்பாத்துரை காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் சின்னப்பன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்துள்ளனா். அவா்களிடம் அனுமதி பெறாத 116 செ.மீ. நீளம் கொண்ட துப்பாக்கி, சாம்பல் கரிமருந்து, பால்ரஸ் குண்டு, கருமருந்து உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனா். அதனைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த பி.கிறிஸ்டோபா், மறவப்பட்டியைச் சோ்ந்த ஜா.பிரபாகரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT