திண்டுக்கல்: வேடசந்தூா் அடுத்துள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை (நவ. 24) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஐய்யா்மடம், குறும்பபட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே. புதூா், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கருப்புச்சாமி தெரிவித்துள்ளாா்.