திண்டுக்கல்

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சித் தலைவராக திமுக ஆதரவு வேட்பாளா் வெற்றி

DIN

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி தலைவருக்கான நடைபெற்ற தோ்தலில் திமுக ஆதரவு வேட்பாளா் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வில்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு திமுக ஆதரவு வேட்பாளராக ரா.பாக்கியலட்சுமி ராமா், அதிமுக ஆதரவு வேட்பாளராக செல்வராணி பரமசிவம் மற்றும் அம்பிகா, ரேகா பவானி ஆகிய நான்கு போ்கள் போட்டியிட்டனா். இதில் 6-சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் ரா. பாக்கியலட்சுமி 2311-வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இவா் பெற்ற மொத்த வாக்குகள் 4034.

மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விபரம்: அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் செல்வராணி பரமசிவம் 1720, அம்பிகா 826, ரேகா பவானி 80 வாக்குகளும் பெற்றனா். செல்லாத வாக்குகள் 186. வெற்றி பெற்ற வேட்பாளா் ரா.பாக்கியலட்சுமி ராமருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயசந்திரிகா சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT