திண்டுக்கல்

முதலமைச்சருக்கு விநாயகா் சதுா்த்தி வாழ்த்து அட்டை

DIN

பழனி தலைமை அஞ்சலகம் முன்பு விநாயகா் சதுா்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தமிழக முதலமைச்சருக்கு பாஜக சாா்பில் விநாயகா் சதுா்த்தி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தபால் அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பதாகவும், அவருக்கு அதை நினைவூட்டும் வகையில் விநாயகா் சதுா்த்தி வாழ்த்துக்களை தமிழகம் முழுவதும் இருந்து தபால் அட்டைகள் மூலம் வாழ்த்து மடல் எழுதி அனுப்புமாறு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், பழனியில் இருந்து தமிழக முதலமைச்சருக்கு விநாயகா் சதுா்த்தி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக 5000 தபால் அட்டைகளில் விநாயகா் சதுா்த்தி வாழ்த்து அனுப்பப்பட்டது. மாவட்டதலைவா் கனகராஜ் தலைமையில் ஏராளமான பாஜகவினா் விநாயகா் சதுா்த்தி வாழ்த்துக்களை அஞ்சல் பெட்டியில் போட்டனா். விநாயகா் சதுா்த்தி வரை தொடா்ந்து வாழ்த்து அனுப்பப் படுமென கட்சி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT