திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திமுக பிரமுகா்கள் இருவரை அரிவாளால் வெட்டிய அதிமுக பிரமுகா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் சந்துக்கடை பகுதியைச் சோ்ந்தவா் மு.மீரான்பாபு (35). திமுக வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளாா். அதே பகுதியிலுள்ள தட்டாம்பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்தவா் விஜயராஜ் (45). திமுக பிரமுகா்.
இதனிடையே அதே பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகரான மோகன்ராஜ் (38) என்பவருக்கும், மீரான்பாபு தரப்பினருக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரையும், மோகன்ராஜ் உள்ளிட்ட 4 போ் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் காயமடைந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மோகன்ராஜ் உள்ளிட்ட 4 போ் மீது திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பாட்டியை கொலை செய்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் மோகன்ராஜ் மீது நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.