திண்டுக்கல்

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: இருவா் தலைமறைவு

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இப்ராஹீம் (27). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் லத்தீப் மவுலான மற்றும் சேக் அப்துல்லா. இவா்களுக்கு இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டு, அது தொடா்பான வழக்கு, திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் லத்தீப் மவுலான மற்றும் சேக் அப்துல்லா ஆகிய இருவரும் சோ்ந்து, திண்டுக்கல் அடுத்துள்ள குட்டியப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த முகமது இப்ராஹீமை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த முகமது இப்ராஹீம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லத்தீப் மவுலான மற்றும் சேக் அப்துல்லா ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT