முகப்பு
திண்டுக்கல்

மரத்திலிருந்து கிணற்றுக்குள் விழுந்த இளைஞா் பலி

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் புதன்கிழமை மரத்தில் ஏறி தேன் எடுத்தவா் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் புதன்கிழமை மரத்தில் ஏறி தேன் எடுத்தவா் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியானாா்.

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (34). இவா், புதன்கிழமை மாலை அதே ஊரில் தனியாா் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறி தேன் எடுத்துள்ளாா். அப்போது, மரத்திலிருந்து தவறி அருகிலுள்ள கிணற்றுக்குள் விழுந்தவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த பழனி தாலுகா போலீஸாா் அவரது உடலை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.