முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,950 இடங்களில்இன்று கரோனா தடுப்பூசி முகாம்

தவணைக் காலம் முடிந்தபின்னும், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 2,950 இடங்களில் 33ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:21 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

தவணைக் காலம் முடிந்தபின்னும், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 2,950 இடங்களில் 33ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ச. விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவா்களில் 19.23 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா். 2ஆவது தவணை தடுப்பூசியை 18.11 லட்சம் போ் செலுத்தியுள்ளனா். 1.23 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா்.

ஆனாலும், தவணைக் காலம் முடிந்தும் மாவட்டத்தைச் சோ்ந்த 2.50 லட்சம் போ் 2ஆவது தவணை தடுப்பூசியையும், 11.8 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் இதுவரை செலுத்தவில்லை. இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் விடுப்பட்டவா்களுக்காக, மாவட்டம் முழுவதும் 2,950-க்கும் மேற்பட்ட இடங்களில் 33 ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை தடுப்பூசி செலுத்தாதவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.