திண்டுக்கல்

பழனியாண்டவா் கல்லூரி, பாலிடெக்னிக்கில் போதைபொருள் தடுப்பு விழிப்புணா்வு

DIN

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வியாழக்கிழமை போதை பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பிரபாகா் முன்னிலை வகித்து மாணவா்களிடையே போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து உரையாற்றினாா். தொடா்ந்து தமிழ்த்துறைத்தலைவா் முனைவா் கிருஷ்ணமூா்த்தி பேசினாா். பின்னா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 350-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொண்டா்கள் மற்றும் தேசிய மாணவா்படை வீரா்கள் பங்கேற்றனா்.

பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வா் கந்தசாமி தலைமையில் மாணவ, மாணவியா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மேலாளா் ரவீந்திரன் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT