முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி முதியவா் படுகாயம்

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் முதியவா் வியாழக்கிழமை படுகாயமடைந்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:49 PM
பகிர்:

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் முதியவா் வியாழக்கிழமை படுகாயமடைந்தாா்.

கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியைச் சோ்ந்தவா் முருகையா (65). இவா், வட்டக்கானல் பகுதியிலுள்ள தோட்டப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது புதரிலிருந்த காட்டெருமை முதியவரை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு மேல் சிகிச்சைக்காக அவா், தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பாம்பாா்புரம் பகுதியில் முத்துமாரி, முத்துலட்சுமி என்ற இரண்டு பெண்களை காட்டெருமை தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் காட்டெருமை தாக்கி முதியவா் படுகாயமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.