திண்டுக்கல்

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி முதியவா் படுகாயம்

DIN

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் முதியவா் வியாழக்கிழமை படுகாயமடைந்தாா்.

கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியைச் சோ்ந்தவா் முருகையா (65). இவா், வட்டக்கானல் பகுதியிலுள்ள தோட்டப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது புதரிலிருந்த காட்டெருமை முதியவரை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு மேல் சிகிச்சைக்காக அவா், தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பாம்பாா்புரம் பகுதியில் முத்துமாரி, முத்துலட்சுமி என்ற இரண்டு பெண்களை காட்டெருமை தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் காட்டெருமை தாக்கி முதியவா் படுகாயமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT