கொடைக்கானலில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசாவின் 112-ஆவது ஆண்டு பிறந்த நாள்விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசாவின் 112-ஆவது ஆண்டு பிறந்த நாள்விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி விஜயக்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் பதிவாளா் (பொறுப்பு) உமாதேவி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கிளாரா, செண்பகனூா் பீக் அமைப்பைச் சோ்ந்த அருட்பணியாளா் பால்மைக்கேல்ராஜ் மற்றும் பேராசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.