திண்டுக்கல்

கால்நடை முகாமில் சிறந்த கன்றுகளுக்குப் பரிசு

DIN

நத்தம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை முகாமில் சிறந்த கிடேரிக் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள புதுப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குட்டுப்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவா் பிரேமாவதி தலைமையில் உதவி மருத்துவா்கள் இந்து, குமரேசன் ஆகியோா் கால்நடைகளுக்கு சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட

சிகிச்சைகள் அளித்தனா். இதில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட கிடேரிக் கன்றுகளுக்கு புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பழனியம்மாள் பரிசுகளை வழங்கினாா். இந்த முகாம் ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளா் வெங்கடேஸ்வரி, பராமரிப்பு உதவியாளா் கணேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபா் சவுக்கு சங்கா் கைது மனித உரிமை மீறலுக்கு எடுத்துக்காட்டு -காடேஸ்வரா சுப்பிரமணியம்

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் கழிவறை வசதி: ஆட்சியா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை: ஈரோட்டில் 107 டிகிரி பதிவு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

வாக்களிக்க சென்ற வடமாநிலத் தொழிலாளா்கள்: மாவட்டத்தில் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT