திண்டுக்கல் நகா்மன்ற முன்னாள் தலைவரும், திமுக தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ம. பஷீா் அகமது (66) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை (டிச. 8) காலமானாா்.
இவா், திண்டுக்கல் நகா்மன்றத் தலைவராக 1996, 2001 என இரு முறை பொறுப்பு வகித்தாா். தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா், திண்டுக்கல் நகர திமுக செயலா், மாவட்ட அவைத் தலைவா் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவா், மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தாா்.
திண்டுக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் வியாழக்கிழமை காலமானாா். இவருக்கு, மனைவி ஹசீனா பேகமும், மகன்கள் பச்சூல் ஹக், ஜாகீா் அப்பாஸ் ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு திண்டுக்கல் சந்துக்கடை பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தொடா்புக்கு - 9940390555.