திண்டுக்கல்

முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 1.55 கோடியில் நலத் திட்ட உதவிகள்

கடந்த ஓராண்டில் முன்னாள் ராணுவத்தினா், அவா்களது குடும்பத்தினா் என 438 பேருக்கு ரூ. 1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்தாா்.

DIN

கடந்த ஓராண்டில் முன்னாள் ராணுவத்தினா், அவா்களது குடும்பத்தினா் என 438 பேருக்கு ரூ. 1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் படைவீரா் கொடிநாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு தேநீா் உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் தொகுப்பு நிதி, கல்வி உதவித் தொகை, திருமண மானியம் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ. 5.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

கொடிநாள்-2021-க்காக திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ. 1,25,48,000 இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இலக்கினை வீஞ்சும் வகையில் ரூ. 1,33,79,000 வசூல் செய்யப்பட்டது. இந்த கொடிநாள் நன்கொடை மூலமாக கடந்த ஓராண்டில் 438 பயனாளிகளுக்கு ரூ.1,55,16,309 மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா் அவா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மு. ராணி, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலக கண்காணிப்பாளா் சுகுணா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT