திண்டுக்கல்

கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்

DIN

திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி சனிக்கிழமை பரிசுகள் வழங்கினாா்.

திண்டுக்கல் புனித வளனாா் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கும், போட்டிகளை நடத்திய 5 பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் பரிசு, கேடயங்களை வழங்கிப் பேசியதாவது:

மாவட்ட அளவில் கவிண்கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித் திறன், இசை சங்கமம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்கு ஒப்புவித்தல், கவிதைப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 600 மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மேலும் மாநில அளவிலான போட்டிக்கு செல்லும் இந்த மாணவா்கள் அதில் சிறப்பிடம் பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, சட்டப் பேரவை உறுப்பினா் காந்திராஜன், மேயா் இளமதி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் அ. பாண்டித் துரை, ஜெகநாதன், வளா்மதி, எஸ். ராகவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT