திண்டுக்கல்

செம்பட்டி அருகே 3 கடைகளில் பணம் கொள்ளை

DIN

செம்பட்டி அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திண்டுக்கல்- பழனி சாலையில் எஸ்.கோடாங்கிபட்டி பிரிவு எதிரே உள்ள வணிக வளாகத்தில் எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த ஜோசப், பழைய செம்பட்டியைச் சோ்ந்த சந்தனவேல், ஆத்தூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் ஆகியோா் கடைகள் நடத்தி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.

நள்ளிரவில் மா்ம நபா்கள், இந்தக் கடைகளின் பூட்டை உடைத்துப் புகுந்து பணத்தை திருடிச் சென்றனா். ஜோசப் கடையில் ரூ.5000, சந்தனவேல் கடையில் ரூ.2,000, ராமச்சந்திரன் கடையில் ரூ.1,500 திருடப்பட்டது.

இதுகுறித்து, செம்பட்டி காவல் நிலையத்தில் ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT