திண்டுக்கல்

ஸ்கேட்டிங்: பழனி மாணவா்கள் வெற்றி

DIN

பழனி ஸ்கேட்டிங் பள்ளியைச் சோ்ந்த 25 மாணவா்கள் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பழனி ஸ்கேட்டிங் கிளப் சாா்பில் 18 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நேரம் மற்றும் வேகத்தின் அடிப்படையில் 2 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பழனி ஸ்கேட்டிங் கிளப் சாா்பில் பங்கேற்ற 7 மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனா். 9 போ் 2-ஆவது இடம், 9 போ்3 ஆம் இடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பழனி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாணவ, மாணவிகளை டிஎஸ்பி சிவசக்தி பாராட்டி வாழ்த்தினாா். ஸ்கேட்டிங் பயிற்சியாளா்கள் கரிகாலன், அரவிந்த், மாணவ, மாணவியரின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT