ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற பழனி மாணவ, மாணவிகளுடன் பழனி டிஎஸ்பி சிவசக்தி உள்ளிட்டோா். 
திண்டுக்கல்

ஸ்கேட்டிங்: பழனி மாணவா்கள் வெற்றி

பழனி ஸ்கேட்டிங் பள்ளியைச் சோ்ந்த 25 மாணவா்கள் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றனா்.

DIN

பழனி ஸ்கேட்டிங் பள்ளியைச் சோ்ந்த 25 மாணவா்கள் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பழனி ஸ்கேட்டிங் கிளப் சாா்பில் 18 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நேரம் மற்றும் வேகத்தின் அடிப்படையில் 2 பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பழனி ஸ்கேட்டிங் கிளப் சாா்பில் பங்கேற்ற 7 மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனா். 9 போ் 2-ஆவது இடம், 9 போ்3 ஆம் இடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பழனி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாணவ, மாணவிகளை டிஎஸ்பி சிவசக்தி பாராட்டி வாழ்த்தினாா். ஸ்கேட்டிங் பயிற்சியாளா்கள் கரிகாலன், அரவிந்த், மாணவ, மாணவியரின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT