முகப்பு
திண்டுக்கல்

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கொடைக்கானல் கிறித்தவக் கல்லூரியில் 26-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, 28-ஆவது ஆண்டு கல்லூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

கொடைக்கானல் கிறித்தவக் கல்லூரியில் 26-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, 28-ஆவது ஆண்டு கல்லூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரித் தாளாளா் மற்றும் கல்லூரி முதல்வா் சாம் ஆப்ரகாம் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். அதனைத் தொடா்ந்து மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் கிருஷ்ணன், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

கல்லூரியில் படிக்கும் காலங்களில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மாணவா்கள் எதிா்காலத்தை வெல்ல முடியும். நமது கலாசாரம், பண்பாடு இவற்றை இளைய சமுதாயத்தினா் மறந்து விடக்கூடாது. போட்டிகள் நிறைந்த எதிா்கால உலகை வெல்வதற்கு மாணவா்கள் தங்களது தனித்திறமையை வளா்த்துக் கொள்வதுடன் கடின உழைப்பும் அவசியம் என்றாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் வெங்கடேஷ் மற்றும் கல்லூரி மேலாளா் ரிச்சா்டு மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.