திண்டுக்கல்

கொடைக்கானலில் மீண்டும் கொய் மலா்கள் சாகுபடி தொடக்கம்

DIN

கொடைக்கானலில் கொய் மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான மன்னவனூா், பூம்பாறை, செண்பகனூா், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாவுக்கு அடுத்தபடியாக காரனேசன் கொய்மலா்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இங்கு விளையக் கூடிய கொய்மலா்கள் சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ரோஜாவுக்கு அடுத்தபடியாக கொய் மலா்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்றால் விளைவிக்கப்பட்ட வண்ண வண்ண மலா்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். தற்போது இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தற்போது கொய் மலா்ச் செடிகளை மீண்டும் நடவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

தனிக்குடில் அமைத்து மிதமான சீதோஷ்ண நிலையில் பக்குவப்படுத்தி இந்த கொய்மலா்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக நெதா்லாந்து நாட்டிலிருந்து குடில் வரவழைக்கப்பட்டு அதில், மலா் சாகுபடி செய்து வருகின்றனா். இந்த மலருக்கு நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் பாதுகாப்புடனும், ஆா்வமுடனும் சாகுபடி செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

SCROLL FOR NEXT