பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம் புதூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.