முகப்பு
திண்டுக்கல்

தேங்காய் நாா் தொழிற்சாலையில் தீவிபத்து

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் தேங்காய் நாா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் மஞ்சிகள், சரக்குவேன் ஆகியன எரிந்து சேதமடைந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் தேங்காய் நாா் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் மஞ்சிகள், சரக்குவேன் ஆகியன எரிந்து சேதமடைந்தன.

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய்நாா் தொழிற்சாலை உள்ளது. இங்கு தேங்காய் மட்டைகளில் இருந்து நாா் பிரிக்கப்பட்டு கயிறு உள்ளிட்டவை தயாரித்து வெளியூா்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை தேங்காய் நாா் தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் நாா்கழிவுகளில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில் அங்கு இருந்த சரக்குவேன் முற்றிலுமான எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினா் வந்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து சாமிநாதபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.