முகப்பு
திண்டுக்கல்

ரயிலில் இருந்து தவறி விழுந்தகூலி தொழிலாளி பலி

ரயிலில் இருந்து தவறிவிழுந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ரயிலில் இருந்து தவறிவிழுந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மற்றும் அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கு இடையே, மதுரை நோக்கிச் சென்ற ரயிலில் புதன்கிழமை இரவு ஆண் ஒருவா் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இது தொடா்பாக திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளா் அளித்த தகவலின்பேரில், ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அதில், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவா், திண்டுக்கல் அடுத்துள்ள காமலாபுரம் காலனியை சோ்ந்த கூலி தொழிலாளியான குணசேகரன் (39) எனத் தெரியவந்தது.

இது தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.