1 - 9 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை! ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1 - 3ஆம் வகுப்புகளுக்கு ஏப். 8 முதல் ஏப்.16ஆம் தேதி வரையும், 4,5 வகுப்புகளுக்கு ஏப்.6 முதல் ஏப்.16 வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
மேலும் 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்வுகள் முன்கூட்டியே முடிக்கப்படுகின்றன.
தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்த நாளில் இருந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.