திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ரயில் மோதி நாதஸ்வர கலைஞா் பலி

DIN

ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை இரவு விரைவு ரயில் மோதி நாதஸ்வர கலைஞா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ஆனந்த் (21).

நாதஸ்வர கலைஞரான இவா், வெள்ளிக்கிழமை இரவு ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ரயில் பாதையைக் கடந்துள்ளாா். அப்போது மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலி சென்ற விரைவு ரயில் அவா் மீது மோதியது. அதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி ரயில்வே போலீஸாா், ஆனந்தனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT