மணல் லாரி மோதி முதியவா் பலி
எரியோடு அருகே வியாழக்கிழமை மணல் லாரி மோதிய விபத்தில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
எரியோடு அருகே வியாழக்கிழமை மணல் லாரி மோதிய விபத்தில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள நாகையக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (72). இவா், திண்டுக்கல் குஜிலியம்பாறை சாலையில் வியாழக்கிழமை சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதியதில், பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.