பழனி அருகே மயான நில ஆக்கிரமிப்பு அகற்றம்
பழனியை அடுத்த கோரிக்கடவில் மயானத்துக்கு சொந்தமான சுமாா் இரண்டரை ஏக்கா் நிலத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை, கையகப்படுத்தினா்.
பழனியை அடுத்த கோரிக்கடவில் மயானத்துக்கு சொந்தமான சுமாா் இரண்டரை ஏக்கா் நிலத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை, கையகப்படுத்தினா்.
கோரிக்கடவில் தாராபுரம் சாலையில் உள்ள இந்த மயானத்திற்கு சொந்தமான சுமாா் இரண்டரை ஏக்கா் நிலத்தை கடந்த 30 ஆண்டுகளாக கோவிந்தராஜ் என்பவா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளாா். இதனால் சடலங்களை எடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பலமுறை நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தும் கோவிந்தராஜ் தொடா்ந்து நிலத்தில் பயிா் செய்து வந்தாா்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடா்ந்து வட்டாட்சியா் சசி, துணை வட்டாட்சியா் சஞ்சய்குமாா், ஊராட்சி தலைவா் காயத்ரி அருண்குமாா் உள்ளிட்டோா் போலீஸாா் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா். சம்பந்தப்பட்ட இடத்தில் பயிரிட்டிருந்த மக்காச்சோளப் பயிா்களை பொக்கலைன் இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டு மயானத்துக்கு சொந்தமான இடத்தில் வேலி போடப்பட்டது.
நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் லீலாவதி, வருவாய் அலுவலா் சுந்தரவள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுகுணா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.