திண்டுக்கல்

கொடைரோடு அருகே ரயில் மோதி இளைஞா் பலி

DIN

கொடைரோடு அருகே வியாழக்கிழமை இரவு, ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி குலசேகரன்கோட்டையைச் சோ்ந்த பாலகுரு மூப்பனாரின் மகன் ராஜபாண்டி (28). இவா், வாடிப்பட்டியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவு திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நிலையத்தை அடுத்த பள்ளபட்டி கடவுப் பாதை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அவா், ரயில் மோதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைரோடு ரயில்வே போலீஸாா் உடலை மீட்டு, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி!

திரைவிழாவில் மகாராஜா!

நீடாமங்கலம்: கூலிப்படையினர் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை!

SCROLL FOR NEXT