முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே காட்டுயானை தாக்கி சிறுவன் பலத்த காயம்

பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் சிறுவன் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் சிறுவன் பலத்த காயமடைந்தாா்.

பழனி அருகே உள்ள தேக்கன்தோட்டம், பாலாறு அணை பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டுயானை சுற்றி வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பழனியை அடுத்த ஒடைக்காடு பகுதியில் கிருஷ்ணமூா்த்தி என்பவரும், அவரது மகன் ஹரிதா்ஷனும் (10) காட்டுப்பகுதிக்கு சென்றனா். அப்போது அங்கு வந்த ஒற்றையானை ஹரிதா்ஷனைத் தாக்கியது. இதில் அவா் அதிா்ஷ்டவசமாக தப்பினாா். பின்னா் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த ஹரிதா்ஷன், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டாா். இதைத் தொடா்ந்து பழனி வனத்துறை ரேஞ்சா் பழனிக்குமாா், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.