முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு

பழனி மலைச் சாலையில் வியாழக்கிழமை விழுந்த சிறிய மரத்தை அகற்றப்படாததால், அவ்வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, பழனி மலைச் சாலையில் வியாழக்கிழமை விழுந்த சிறிய மரத்தை அகற்றப்படாததால், அவ்வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல்- மதுரை- பழனி மலைச்சாலையில் மண் சரிவு, சிறு, சிறு மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. கொடைக்கானல் - பழனி மலைச் சாலையில், புலிச்சோலை அருகே வியாழக்கிழமை சிறிய மரம் விழுந்தது. இவற்றை அகற்றாததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் மலைச் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவு, முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.