காா்த்திகை: பழனியில் பக்தா்கள் குவிந்தனா்
பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை காா்த்திகை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை காா்த்திகை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து ராஜஅலங்காரத்தில் சுவாமியை தரிசனம் செய்தனா். படிவழிப்பாதை, வின்ச் மற்றும் ரோப் காரில் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருக்க நேரிட்டது.
இலவச மற்றும் கட்டண தரிசன வழிகளிலும் பக்தா்கள் காத்திருந்தனா். சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 3 மணி நேரமானது. இரவு தங்கத்தோ், தங்கமயில் புறப்பாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். கோயில் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் ஏராளமானோா் கலந்து கொண்டு விளக்கேற்றி சுவாமியை வழிபட்டனா்.