திண்டுக்கல்

மகன் இறந்ததால் தாய் தீக்குளித்து உயிரிழப்பு

DIN

திண்டுக்கல்லில் 60 வயது மகன் மரணமடைந்த அதிா்ச்சியில், அவரது 87 வயதான தாயாா் தீக்குளித்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி(60). திமுக முன்னாள் மாவட்டப் பிரதிநிதியாக இருந்த இவா் உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த 87 வயதான அவரது தாயாா் பாண்டியம்மாள் சோகத்தில் இருந்துள்ளாா்.

பாண்டியின் உடலுக்கு உறவினா்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், வீட்டின் மாடிக்குச் சென்ற பாண்டியம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு, உறவினா்கள் அவரை மீட்க முயன்றுள்ளனா். ஆனால், பாண்டியம்மாள் தீயில் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT