கோயில் முன் உண்ணாவிரதம்: இந்து சஷ்டி சேனா தலைவி கைது
பழனியில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ் பாரதியைக் கண்டித்து, கோயில் அருகே உண்ணாவிரதம் இருந்த இந்து சஷ்டிசேனா நிறுவனத் தலைவியை போலீஸாா் கைது செய்தனா்.
பழனியில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ் பாரதியைக் கண்டித்து, கோயில் அருகே உண்ணாவிரதம் இருந்த இந்து சஷ்டிசேனா நிறுவனத் தலைவியை போலீஸாா் கைது செய்தனா்.
பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அண்மையில் திமுகவினா் மீதான சொத்துப் பட்டியலை வெளியிட்டாா். இதையடுத்து, திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி நஷ்ட ஈடு கோரி அண்ணாமலைக்கு குறிப்பாணை அனுப்பினாா்.
இந்த நிலையில், இந்து சஷ்டிசேனா நிறுவனத் தலைவி சரஸ்வதி ஆா்.எஸ்.பாரதியைக் கண்டித்து, பழனி மாரியம்மன் கோயில் முன்பாக திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டாா். இதையடுத்து, பழநி நகா் காவல் நிலைய போலீஸாா் சரஸ்வதியைக் கைது செய்தனா்.