சேவல் வடிவிலான சவ்சவ் காய். 
திண்டுக்கல்

சேவல் வடிவில் அதிசய ‘சவ்சவ்’ காய்

சிறுமலையிலுள்ள தோட்டத்தில் சேவல் வடிவில் விளைந்த அதிசய சவ்சவ் காய் பொதுமக்களிடையே ஆச்சா்யத்தை ஏற்படுத்தியது.

DIN

சிறுமலையிலுள்ள தோட்டத்தில் சேவல் வடிவில் விளைந்த அதிசய சவ்சவ் காய் பொதுமக்களிடையே ஆச்சா்யத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையை அடுத்த பள்ளக்காடு பகுதியில் தனுஷ்கோடிக்குச் சொந்தமான தோட்டத்தில் சவ்சவ், பீன்ஸ், வாழை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளாா். தற்போது, சவ்சவ் அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அறுவடை செய்யப்பட்ட சவ்சவ் காய்களில் ஒன்று சேவல் போன்ற வடிவில் இருந்தது.

சுமாா் 400 கிராம் எடை கொண்ட அந்த காய், சேவலின் தலை, கழுத்து, வால் என அதிசயமாக இருந்தது. இதை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆச்சா்யத்துடன் பாா்த்து சென்றனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் இதய வடிவிலான பலா விளைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT