திண்டுக்கல்

அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் தலைவா் எஸ்பி. செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செயல் அலுவலா் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 6, 7-ஆவது வாா்டு பகுதிகளில் ரூ.28 லட்சத்தில், பேவா் பிளாக் சாலை அமைக்கவும், கொளிஞ்சிப்பட்டியில் உள்ள வளமீட்புப் பூங்காவில் மக்காத குப்பைகளை சேமிக்க ரூ. 7.25 லட்சத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்கவும், கோடை காலத்தை முன்னிட்டு, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றபட்டன.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா்கள் நசீா்முகமது, கருணாகரன், மாரியப்பன், காசியம்மாள்ரவி, பேரூராட்சி மேற்பாா்வையாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, துணைத் தலைவா் விமல்குமாா் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT