முகப்பு
திண்டுக்கல்

குடியரசு தின விழா: திண்டுக்கல்லில் 95 பயனாளிகளுக்கு ரூ. 20.94 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 95 பயனாளிகளுக்கு ரூ. 20.94 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
சிறப்பாக பணிபுரிந்த காவலா்களுக்கு பதக்கங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச. விசாகன். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 95 பயனாளிகளுக்கு ரூ. 20.94 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 74-ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள், வண்ண பலூன்களை அவா் பறக்க விட்டாா். காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊா்க் காவல் படையினரின் அணி வகுப்பும் நடைபெற்றது.

முதலமைச்சா் காவலா் பதக்கம் 70 பேருக்கும், சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினா் 59 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்களை மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வழங்கினாா். இதில், தியாகிகள் 3 பேருக்கும், தியாகிகளின் வாரிசுதாரா்கள் 4 பேருக்கும், மொழிப்போா் தியாகிகள் 3 பேருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்கள், ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித்துறை அலுவலா்கள், பேரூராட்சித் துறை அலுவலா்கள், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, குடிநீா் வடிகால் வாரியம், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறையைச் சோ்ந்த 157 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

Advertisement

முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு தொகை உள்ளிட்ட 95 பயனாளிகளுக்கு ரூ. 20.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவா் அபி நவ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரியங்கா, மாவட்ட ஊராட்சிச் செயலா் கிரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதே போல கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை வளாகத்தில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் ஆலையின் தலைவா் வி. கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகிய அமைப்புகள் சாா்பாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி, நகரச் செயலா் பிரேம்குமாா், நகரத் தலைவா் அஜீத் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினாா். நிகழ்ச்சியில் ரத்த வங்கி பொறுப்பாளா் புவனா, தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.