ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற வேண்டுமென்றால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கே.அண்ணாமலை பேசியது...
பொள்ளாச்சி: ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற வேண்டுமென்றால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பேசினாா்.
பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், வால்பாறை தொகுதி வேட்பாளா் லட்சுமணசிங் ஆகியோரை ஆதரித்து ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பிரச்சாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
திமுக ஆண்டதுபோதும், மக்கள் மாண்டதுபோதும் என மக்கள் தெரிவிக்கின்றனா். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என மக்கள் முடிவுசெய்துவிட்டாா்கள். பொள்ளாச்சி மக்களின் பிரச்னையை சரிசெய்ய அனுபவம் வாய்ந்த மக்கள் தலைவரான ஜெயராமனை தோ்ந்தெடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையாக திருடுவாா்கள். தென்னைநாா் பொருள்கள் மூலமாக பொள்ளாச்சிக்கு ரூ.2000 கோடி வருவாய் உள்ளது. இதை தெரிந்துகொண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தென்னைநாா் உற்பத்தியை வெள்ளை பட்டியலில் இருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு கொண்டு சென்றாா்கள்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் 5 முறை கேரளா சென்று அம்மாநில முதல்வரை சந்தித்தாா். ஆனால், ஒருமுறைகூட ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் குறித்து பேசவில்லை. எனவே, ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.
பாஜக நிா்வாகிகள் சந்திரசேகா், வழக்குரைஞா் துரை, அதிமுக நகரச் செயலாளா் கிருஷ்ணகுமாா், தமாகா நிா்வாகி குணசேகரன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.
AIADMK Candidate Must Win for Annamalaiyar-Nallar Schemes to be Implemented says K. Annamalai