கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி
ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM
ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (75). இவா், வியாழக்கிழமை இரவு தனது தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து நீரில் முழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) சிவன்ராஜ் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை நடராஜன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement