திண்டுக்கல்

குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் சடலம் மீட்பு

DIN

திண்டுக்கல் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய சிறுவனின் சடலம் 2 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

திண்டுக்கல் பிள்ளையாா் பாளையத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன். இவரது மகன் வருண் (15). திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வீட்டிலிருந்து வெளியே சென்ற வருண், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோா், உறவினா்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், திண்டுக்கல் நந்தவனப்பட்டியிலுள்ள கல்குவாரி அருகே வருணின் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இதைடுத்து, தாடிக்கொம்பு போலீஸாா் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கல்குவாரி தண்ணீரில் வருணைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். 10 போ் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை இரவு வரை தேடியும் வருண் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கல்குவாரி தண்ணீரில் வருணின் சடலம் செவ்வாய்க்கிழமை காலை மிதந்தது. சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறையினா் தாடிக்கொம்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து, தாடிக்கொம்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கடம்பூரில் மழை: சாலையில் விழுந்த மூங்கில் மரம்

பண்ணாரி அம்மன் கோயியில் ரூ. 98.44 லட்சம் உண்டியல் காணிக்கை

SCROLL FOR NEXT