திண்டுக்கல்

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

சாணாா்பட்டி வட்டாரப் பகுதியில் நடைபெற்று வரும் ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூவனூத்து, டி.பஞ்சம்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, நொச்சியோடைப்பட்டி, கன்னியாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.1.40 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பால் கூட்டுறவு சங்கக் கட்டடம், ஊராட்சி அலுவலகக் கட்டடம், பள்ளி வகுப்பறைக் கட்டடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து நொச்சியோடைப்பட்டி நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்களின் தரத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் இளையராசா, அருள்கலாவதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT