திண்டுக்கல்

பழனியில் 18-ஆம் நூற்றாண்டு செப்புப் பட்டயம்

பழனியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தெய்வச்சிலைகளுடன் கூடிய செப்புப் பட்டயத்தை தொல்லியல் ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா்.

DIN

பழனியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தெய்வச்சிலைகளுடன் கூடிய செப்புப் பட்டயத்தை தொல்லியல் ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு 64 ஐயன்மிராஸ் பண்டாரங்கள் உள்ளனா். பாரம்பரியமாக இவா்களே பழனி ஆண்டவருக்கு ஆறு கால பூஜைக்கு தேவையான புனித தீா்த்தங்களை வரட்டாற்றிலிருந்து தலைச் சுமையாக கோயிலுக்கு படி வழியாக எடுத்து வருகின்றனா். பழனி அடிவாரம் பகுதியில் பழனி மலைக் கோயில் ஸ்தானீக மிராஸ் 64 திருமஞ்சன பண்டாரங்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட நந்தவனம் உள்ளது. இங்கு ஸ்தானீக மிராஸ் பண்டாரங்களான சக்திவேல், ஜெயன் கருப்பையா ஆகியோா் பழைமையான தெய்வச் சிலையுடன் கூடிய செப்புப் பட்டயத்தை பாதுகாத்து வருகின்றனா்.

இந்தப் பட்டயத்தை செவ்வாய்க்கிழமை தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் தெரிவித்ததாவது:

இது கி.பி.18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செப்புப் பட்டயம் ஆகும். இந்த தெய்வச்சிலை செப்புப் பட்டயம் செங்குந்த முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவா்களின் சூரசம்ஹார மண்டகப்படிக்கு வழங்கப்பட்ட பட்டயம் என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பு சண்முக வாத்தியாா் பேரன் ஓலைச் சுவடியில் எழுதியிருந்ததை, செங்குந்த முதலியாா் சமூகத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க தாமிர சாசனப் பட்டயமாக, நஞ்சய பண்டாரம் என்பவா் எழுதியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. பட்டயத்தின் முன்புறம் சூரிய, சந்திர படத்துடன் செங்குந்த முதலியாா்கள் வணங்கும் ஈட்டியுடன் நவவீரா்கள் கைகளில் கேடயத்துடனும், விநாயகா், தண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களின் நின்ற உருவம் கலை நயத்துடனும் பொறிக்கப்பட்டுள்ளது. பட்டயத்தின் பின் புறம் கிரந்த மொழி, தமிழ் மொழியால் ஆறு வரிகள் மடக்கி எழுதப்பட்டுள்ளது. முருகனுக்கு உகந்த 6 என்ற எண் வரும் வகையில் ஆறு வரிசையில் எழுதப்பட்டிருக்கலாம்.

1.7 கிலோ எடையுடன் 18 செ.மீ உயரமும், 45 செ.மீ. நீளமும் உடைய இந்தப் பட்டயம் கிரந்த மொழியில் தெண்டாயுதபாணி ஸகாயம் என்று துவங்குகிறது. அதன் கீழே பழனி மலை ஸ்தவராஜ பண்டிதா் என கையொப்பம் இடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது, ஆய்வு மாணவா்கள் திருவேங்கடம், அஜய்கிருஷ்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT