முகப்பு
திண்டுக்கல்

மானூா் சுவாமிகள் கோயிலில் பங்குனி அம்மாவாசை பூஜை

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பழனியை அடுத்த கோதைமங்கலம் மானூா் சுவாமிகள் கோயிலில்பங்குனி அமாவாசையை முன்னிட்டு, பீடத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 10:32 PM

பழனி: பழனியை அடுத்த கோதைமங்கலம் மானூா் சுவாமிகள் கோயிலில் பங்குனி அம்மாவாசையை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் அமைந்துள்ள மானூா் சுவாமிகள் கோயிலில் பங்குனி அம்மாவாசையை முன்னிட்டு உச்சிக்காலத்தின் போது அகவல் பாராயணமும், பின்னா், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி பீடத்துக்கும், சிலைக்கும் பால், பன்னீா், இளநீா்ல விபூதி உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு வண்ணமலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து மகாதீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மானூா் கோயில் மட்டுமன்றி அடிவாரம் பால்பண்ணை மவுனகிரி சுவாமிகள் கோயில், கணக்கன்பட்டி சத்குரு கோயில், அழுக்கு சாமி கோயில் என பல சித்தா் பீடங்களிலும் அம்மாவாசை பூஜைகள் நடைபெற்றன.

Advertisement