பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு, சுந்தரநாயனாா் பெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜைகள். 
திண்டுக்கல்

சுந்தரமூா்த்தி நாயனாா் குருபூஜை

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு குருபூஜை நடைபெற்றது.

Din

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை குருபூஜை நடைபெற்றது.

சைவ சமயத்தில் நால்வரில் ஒருவராகவும், 63 நாயன்மாா்களில் ஒருவராகவும் திகழ்பவா் சுந்தரமூா்த்தி நாயனாா். ஆடி மாதம் சுவாமி நட்சத்திரத்தின் போது இவருக்கு குருபூஜை நடைபெறுகிறது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பழனிக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT